SUNDAY IS A DAY OF OBLIGATION
SUNDAY IS A DAY OF OBLIGATION
G. Alex Benziger, Advocate
1. "சட்டம் இல்லாத போது குற்றச்சாட்டுக்கு இடமில்லை." (உரோ.. 5:13= There was no law and so no one could be
accused of the sin of law breaking. Romans. 5:13). எனவே, எந்த ஒரு விஷயத்தையும், யார் ஒருவர் பின்பற்ற வேண்டுமானாலும் அதற்கு ஒரு சட்டம் தேவை. அப்படியென்றால்தான் அந்த விஷயம் செல்லுபடியாகும்.
ஆண்டவர் உலகை படைக்கும் போது சனிக்கிழமையைத் தான் ஓய்வு நாளாக படைத்தார்.
அது எப்படி ஞாயிற்றுக்கிழமைக்கு மாறியது.
சனிக்கிழமை ஓய்வு நாள் என்றிருந்ததை: ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்று மாற்றியது யார்?
மாற்றியவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்?
2. இந்த உலகத்தை ஆண்டவர் படைக்கும் பொழுது ஐந்து நாட்களில்
வானம், பூமி, கடல், ஆகாயம், காற்று, ஊர்வன, பறப்பன, மரம், செடி, கொடிகள் யாவற்றையும் படைத்த பின் ஆறாம் நாள் மனிதனை படைத்தார். பின்னர் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார். இவ்வாறு விண்ணும் மண்ணும் அவற்றிற்கு அழகு தரும் யாவும் படைக்கப்பட்டு முடிந்தன. கடவுள் தாம் ஏழாம் நாளிற்கு முன் செய்த வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார். மேலும் தாம் செய்ய நினைத்திருந்த வேலைகளையெல்லாம் செய்துவிட்டு அந்நாளில் ஓய்வெடுத்தார். எனவே, அவ்வேழாம் நாளை மாலை ஆசீர்வதித்துப் பரிசுத்தமாக்கினார். (ஆதியாகமம்.2:13).
3. இந்த ஏழாம் நாள் என்பது சனிக்கிழமை ஆகும். அதனால் தான்
கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் ஏழாம் நாள் சபை (Seventh-Day
Adventist Church) என்று ஒரு சபையை நடத்தி வருகின்றனர். நாம்
ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் வழிபாடு ஆகிய அனைத்து
விஷயங்களையும் இந்தப் பிரிவினர் சனிக்கிழமை தான் செய்வார்கள்.
ஏழாம் நாள் சனிக்கிழமை என்பதை மத்தேயு 28:1-2 மூலம் அறியலாம்.
இப்போது ஞாயிற்றுக்கிழமை என்பதை பொதுவாக உலக மக்கள்
அனைவரும் விடுமுறை நாளாகவே பின்பற்றி வருகின்றனர். ஆனால்
பரிசுத்த வேதாகமத்தை படிக்கும்போது ஞாயிறு முதல் நாள் என்பதை தெளிவாகக் காணமுடிகிறது. "வாரத்தின் முதல்நாள்
விடியற்காலையில் இருட்டாயிருக்கும் பொழுதே, மதலேன் மரியாள்
கல்லறைக்கு வந்தாள். கல்லறை வாயிலில் இருந்த கல்
எடுபட்டிருப்பதைக் கண்டாள்." (அருளப்பர்: 20:1). “வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் பெண்கள் தாங்கள் ஆயத்தப்படுத்தியிருந்த
வாசனைப் பொருள்களை எடுத்துக் கொண்டு கல்லறைக்குச்
சென்றனர். கல்லறை வாயிலில் இருந்த கல் புரட்டியிருக்கக் கண்டனர். " (லூக்காஸ். 24:1-2). "வாரத்தின் முதல்நாள் காலையில், அவர்
உயிர்த்தெழுந்து முதலில் மதலேன் மரியாளுக்குத் தோன்றினார்.
இவளிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களைத் துரத்தியிருந்தார்."
(மாற்கு. 16:9). "ஓய்வு நாளுக்குப் பின், வாரத்தின் முதல்நாள்
விடியற்காலையில் மதலேனன் மரியாளும் மற்ற மரியாளும்
கல்லறையைப் பார்க்க வந்தனர். இதோ! பெரிய நிலநடுக்கம்
உண்டாயிற்று. ஆண்டவரின் தூதர் வானினின்று இறங்கி வந்து,
கல்லைப் புரட்டி அதன் மேல் அமர்ந்தார்." (மத்தேயு. 28:1-2).
4. பின்னர், ஆண்டவர் இயேசு இவ்வுலகை விட்டு பரலோகம் சென்ற பின், 40ம் நாள் பரிசுத்த ஆவி அப்போஸ்தலர்கள் மேல் தங்கியது. (அப். பணிகள். 2:3) அதுமுதல் பயந்து போயிருந்த அப்போஸ்தலர்கள் தைரியம் பெற்றனர். ஏற்கனவே இயேசு ஆண்டவரின் 12 சீடர்களில் புனித பேதுருவிடம், "நான் உனக்குச் சொல்லுகிறேன், “உன் பெயர் "பாறை" இந்த பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் நரகத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றிக்கொள்ளா. வானகத்தின் திறவுகோல்களை உனக்குக் கொடுப்பேன். எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும். எதெல்லாம் மண்ணகத்தில் அவிழ்ப்பாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும் என்றார்”. (மத்தேயு16:18-19). மேலும், “என் ஆடுகளை மேய்” (அரு. 21:15-16) “என் ஆடுகளைக் கண்காணி” (அரு. 21:17) என்றார், இவ்வாறு பன்னிரண்டு சீடர்களில் புனித பேதுருவை தலைவராக ஏற்படுத்தினார், எனவேதான் புனித பேதுரு எல்லா சீடர்கள் முன்னிலையில் அங்கே கூடியிருந்த மக்களிடம் பேசினார். (அப். பணி. 2:14-41). இயேசு ஆண்டவரின் மற்றைய சீடர்கள் புனித பேதுருவின் தலைமையை ஏற்று ஆண்டவர் இயேசுவைப் பற்றியும் அவரது போதனைகள் பற்றியும் பொது மக்களுக்கு அறிவிக்கலாயினர். இன்றைய தினமே கத்தோலிக்க திருச்சபை உதயமானது. இந்த சபையானது புனித பேதுருவுக்கு பின் போப்பாண்டர்களால் இன்றளவும் வழிநடத்தப்பட்டு வருகிறது. ஆண்டவர் இயேசு “கடவுளின் அரசையும் அவருக்கு ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.” (மத்தேயு. 6:33) என்று பணித்தார். இதனால் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு போதிக்கும் அதிகாரமும், வழி நடத்தும் அதிகாரமும் இயேசு ஆண்டவரால் வழங்கப்பட்டது. புனித பேதுருவிற்குப் பின்வந்த போப்பாண்டர்களால் இயேசு ஆண்டவர் ஸ்தாபித்த திருச்சபையை வழிநடத்தும் போது ஆண்டவர் இயேசுவை பின்பற்றும் மக்களுக்கு பல போதனைகளையும், விளக்கங்களையும், பாதுகாப்பையும் வழங்கிட அவசியம் ஏற்பட்டது.
5. ஆதிகால அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் ஆரம்பத்தில் வேதாகமம் சம்பந்தப்பட்ட கைப்பிரதிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு கிட்டத்தட்ட 5000 கைப்பிரதிகளை சேகரித்தனர். போப்பாண்டவர் டமாசுஸ் உத்தரவின் பேரில் புனித இரோணிமூஸ் என்பவரால் பரிசுத்த வேதாகமத்தின் கைப்பிரதிகளை, எபிரேய
மொழியிலிருந்து லத்தின் மொழியிலும், கிரேக்க மொழியிலிருந்து
லத்தீன் மொழியிலும் மொழிபெயர்த்து, முதன்முதலாக பரிசுத்த
வேதாகமம் லத்தீனில் வெளியிடப்பட்டது. பின்னர் கி.பி. 325-ல்
திருச்சபையில் முதல் பரிசுத்த சங்கம் நிசியே என்ற இடத்தில்
(The First Council of
Nicaea : 20 May – 25 July, 325 AD) கூட்டப்பட்டு கடவுள் மீது விசுவாசம் கொண்டவர்களால், தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடும்படி பிரமாண அறிக்கை (The Apostles Creed) வெளியிடப்பட்டது. மீண்டும் முதல் காண்ஸ்டன்டைன் (Council of Constantine-1:381 AD) சங்கத்தால் சில திருத்தங்களுடன் விசுவாச அறிக்கை கி. பி. 381ல் வெளியிடப்பட்டது. இதுவரை கத்தோலிக்க திருச்சபையால் 21 பரிசுத்த சபைகள் கூட்டப்பட்டு பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
6. இந்த கத்தோலிக்க திருச்சபையானது 1917ல் கத்தோலிக்க மக்கள்
வாழ்விலும் நடைமுறையிலும் வழிபாடுகள் பற்றியும் அவைகளை
பின்பற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு சட்டத் தொகுப்பு
(Code of Canon Law) வெளியிடப்பட்டது. பின்னர் சில திருத்தங்களுடன்
அந்தச் சட்டத் தொகுப்பு மறுபடியும் 1983இல் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபை இன்னும் பல
விளக்கங்களையும் மக்களுக்கு அறிவுறுத்தும் பொருட்டு
Catechism of the Catholic
Church, உருவாக்கப்பட்டு 8-12-1992ல் போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் அவர்களால் நடைமுறைப் படுத்தப் பட்டது. இந்த Catechimsm of Catholic Church அதிகாரம் 4 பிரிவு 13 தெரிவிப்பதாவது. “மிக ஆரம்பத்திலேயே, சீடர்களை உருவாக்குவதற்கும், இயேசு கடவுளின் குமாரன் என்று மனிதர்களை நம்ப வைப்பதற்கும், அவருடைய நாமத்தில் அவர்கள் ஜீவனைப் பெறுவதற்கும், இந்த வாழ்க்கையில் அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கும், கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் திருச்சபை மேற்கொண்ட முயற்சிகளின் முழுமைக்கும் "ஞான உபதேசம்" (Catechism of the Catholic Church) என்ற பெயர் வழங்கப்பட்டது. Catechism of the Catholic Church பிரிவு 5 தெரிவிப்பதாவது, ஞான உபதேசம் (Catechesis) என்பது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கு விசுவாசத்தில் கல்வி கற்பிப்பதாகும், இதில் குறிப்பாக கிறிஸ்தவ கோட்பாட்டினை கற்பித்தல், பொதுவாகச் சொன்னால், ஒரு இயற்கையான மற்றும் முறையான முறையில், கேட்பவர்களை கிறிஸ்தவ வாழ்க்கையின் முழுமைக்குள் வழிநடத்தும் நோக்கில் வழங்கப்படுகிறது." என்கிற கோட்பாடுகளையும் வெளியிட்டது. கத்தோலிக்கர்களை Code of Canon Law திருச்சபை சட்டம் என்கிற இந்த சட்டம் கட்டுப்படுத்தும் என்று பிரிவு 11 தெரிவிக்கிறது. ("Can. 11 Merely ecclesiastical laws bind those who
have been baptized in the Catholic Church or received into it, possess the
efficient use of reason, and, unless the law expressly provides otherwise, have
completed seven years of age”).
7. என்னைப் போன்றவர்கள் சிறு வயதில் புது நன்மை எடுப்பதற்கு முன்பு ஆயத்தப்படுத்த திருச்சபையின் போதனைகளைப் பற்றிய ஒரு புத்தகம் "சின்ன குறிப்பிடம்" என்று அழைக்கப்படும் ஒரு புத்தகம் ஆகும். இந்த புத்தகத்தைப் படித்து தெரிந்து கொண்டால், ஆண்டவர் உலக படைத்தது முதல் வேதாகமம் பற்றிய விளக்கங்கள் திருச்சபையின் போதனைகள் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளலாம். அது இன்றளவு வரை என் போன்றவர்களுக்கு உதவியாக உள்ளது. அதாவது "சின்ன குறிப்பிடம்" படித்தாலே கடவுள் பற்றியோ அல்லது ஆண்டவரின் படைப்பு பற்றியோ அல்லது திருச்சபையின் போதனைகள் பற்றியோ யார் எந்த கேள்வி கேட்டாலும் பதில் அளிக்க முடியும். ஆனால் இப்போதைய பிஷப்களும், சாமிமார்களும் மொழி சீர்திருத்தம் என்ற பெயரில் உண்மையான போதனைகளை கொடுக்க தவறிவிட்டனர். அதனால் தான்; நான் Facebookல் "ரோமன் கத்தோலிக்கர்கள், ஞாயிற்றுக்கிழமை பூசையில் கட்டாயம் பங்கு கொள்ள வேண்டுமா? பங்கு கொள்ளாவிட்டால் பாவமா”? என்ற ஒரு கேள்வியை கேட்டேன். ஆனால் யாருக்குமே பதில் சொல்ல தெரியவில்லை. மாறாக அவரவருக்குத் தெரிந்த மாதிரி, சிலர் ஏதோ ஒரு பதில் விளக்கம் அளித்தனர். எனவேதான் இந்தக் கட்டுரை
எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
நான் மேலே சொன்னது போல்
சின்ன குறிப்பிடத்தின் 64வது கேள்வி,
கேள்வி: திருச்சபையின் பிரதான கட்டளைகள் எத்தனை?
பதில்: ஆறு.
ஆறு கட்டளைகளும் பின் வருமாறு:
திருச்சபையின் ஒழுங்குமுறைகள்
A.
ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் முழுப்பூசை
காண்கிறது என்று Canon Law 1246(i) தெரிவிக்கிறது,
Canon 1246 (i): Sunday is the day on which the paschal mystery is celebrated in light of the apostolic tradition and is to be observed as the foremost holy day of obligation in the universal Church. Also to be observed are Christmas, the Epiphany, the Ascension and Corpus Christi, Holy Mary Mother of God and her Immaculate Conception and Assumption, Saint Joseph, the Apostles Saints Peter and Paul, and finally, All Saints.” Canon Law.1247, On Sundays and other holydays of obligation, the faithful are obliged to participate in the Mass.
B. வருடத்திற்கு ஒருமுறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்று Canon Law 989 தெரிவிக்கிறது.
Canon 989 தெரிவிக்கிறது.: After having attained the age of discretion, each of the faithful is bound by an obligation faithfully to confess serious sins at least once a year.
C. பாஸ்கு காலத்தில் பாவ சங்கீர்த்தனம் செய்து தேவநற்கருணை
உட்கொள்ளுகிறது.
Can. 920 §1. மகா பரிசுத்த நற்கருணையை முறையாக பெற்ற பிறகு, ஒவ்வொரு விசுவாசியும், வருடத்திற்கு ஒரு முறையாவது கட்டாயமாக பரிசுத்த நற்கருணையைப் பெற வேண்டும் என்கிற கடமையை சுமத்தியுள்ளது.
Can. 920 §2. இந்த கட்டளை ஈஸ்டர் காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், இல்லையெனில் வருடத்தில் வேறு ஒரு நேரத்தில் ஒரு நியாயமான காரணத்திற்காக அது நிறைவேற்றப்பட வேண்டும்.
Can. 920
§1. After being initiated into the Most Holy Eucharist, each of the faithful is
obliged to receive Holy Communion at least once a year.
§2. This precept must be fulfilled during the Easter season unless it is fulfilled for a just cause at another time during the year.
D. சுத்தபோசன நாட்களில் சுத்த போசனமும், ஒருசந்தி நாட்களில்
ஒருசந்தியும் அனுசரிக்கிறது. Canon Law 1251.
Canon 1251: Abstinence
from meat, or from some other food as determined by the Episcopal Conference,
is to be observed on all Fridays, unless a solemnity should fall on a Friday.
Abstinence and fasting are to be observed on Ash Wednesday and Good Friday.
E. விலக்கப்பட்ட காலத்திலும் குறைந்த வயதிலும் விக்கினமுள்ள உறவு முறையாரோடும் (திருமணத் தடை உள்ள உறவினரோடும்) திருமணம் செய்யாதிருப்பது. Canon Law 1083 (i), (ii) மற்றும்
1091.
Canon 1083 (i): A man
before he has completed his sixteenth year of age and a woman before she has
completed her fourteenth year of age cannot enter into a valid marriage.
Canon 1083 (ii). The
conference of bishops is free to establish a higher age for the licit
celebration of marriage.
Canon 1091 (i): In the
direct line of consanguinity marriage is invalid between all ancestors and
descendants, both legitimate and natural. §2. In the collateral, line marriage
is invalid up to and including the fourth degree. §3. The impediment of
consanguinity is not multiplied. §4. A marriage is never permitted if doubt
exists whether the partners are related by consanguinity in any degree of the
direct line or in the second degree of the collateral line.
F. நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது. Canon Law 209 மற்றும் 222.
Canon 209 (i)The Christian
faithful, even in their own manner of acting, are always obliged to maintain
communion with the Church. §2. With great diligence, they are to fulfil the
duties which they
owe to the universal Church and the particular church to which they
belong according to the prescripts of the law.
Canon 222 (i)The Christian
faithful are obliged to assist with the needs of the Church so that the Church
has what is necessary for divine worship, for the works of the apostolate and
of charity, and for the decent support of ministers. §2. They are also obliged
to promote social justice and, mindful of the
precept of the Lord, to assist the poor from their own resources. இவ்வாறு
திருச்சபை கட்டளைகள் ஆறையும் மீறுவது, திருச்சபை சட்டம் (Canon Law 11)
11-ன் படி பாவம் ஆகும். ஆகவே, மேற்கண்ட சட்ட பிரிவுகளின்படி, கத்தோலிக்க இறை மக்கள் ஞாயிற்றுக்கிழமை பூஜையில் கட்டாயம் பங்கு பெற வேண்டும். பங்கு பெறாவிட்டால் அது அவர்களுக்கு பாவம்.
8. ஆண்டவராகிய கடவுள், ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் என்பதற்கிணங்க வாரத்தின் ஏழாம் நாள் சனிக்கிழமை என்பதாலும், முதல் நாள் ஞாயிறு என்பதாலும் சனிக்கிழமை தானே ஓய்வு நாளாக அனுசரிக்க வேண்டும். அதனால்தான் Seventh-Day Adventist சபையினர்
இன்றளவு வரை சனிக்கிழமை ஓய்வு நாளாக அனுசரித்து, அன்றைய
தினம் வழிபாட்டுக்காக கோவிலுக்கு போகின்றனர். ஆனால் ரோமன் கத்தோலிக்கர்கள் முதல் எல்லா கிறிஸ்தவ சபைகளும்
ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளாக அனுசரிப்பதுடன் ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகளில் பங்கு கொள்கின்றனர். அது ஏன்? ஆண்டவர் மோயீசனுக்கு (Moses) சீனாய் மலையில் பத்து கட்டளைகள் வழங்கினார். (யாத்திராகம் 20:2-17). அதில் மூன்றாம் கட்டளை ஓய்வு நாளை பரிசுத்தமாய் அனுசரிக்க வேண்டும் (யாத்திராகமம். 20:8-11) என்பதாகும். "கர்த்தருடைய நாள், இது கர்த்தர் உண்டாக்கிய நாள்: அதில் நாம் களிகூர்ந்து மகிழ்ச்சியடைவோம். (சங்கீதம். 117:24). ஞாயிற்றுக்கிழமை இயேசு ஆண்டவர் உயிர்த்தெழுதலின் நாள்: இது புதிய படைப்பு "கர்த்தருடைய நாள்" என்று அழைக்கப்படும்.
9. ஞாயிற்றுக்கிழமை. என்பது இயேசு ஆண்டவர் தனது உடலையும் இரத்தத்தையும் உணவாக வழங்கி, அவர் மீண்டும் வரும் வரையில் செய்திட பணித்தார். ஞாயிற்றுக்கிழமை, அது உயிர்த்தெழுதலின்
நாள். இது வழிபாட்டுக் கூட்டத்தின் முதன்மையான நாள், கிறிஸ்தவ
குடும்பத்தின் நாள், மற்றும் வேலையிலிருந்து ஓய்வு பெறும் நாள்
(Catechism of Catholic Church:1193).
10. "இயேசு "வாரத்தின் முதல் நாளில்" மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். இது "முதல் நாள்" என்பதால், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நாள் முதல் படைப்பை நினைவுபடுத்துகிறது. இது ஓய்வுநாளைத் தொடர்ந்து வரும் "எட்டாவது நாள்" என்பதால், இது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால் தொடங்கப்பட்ட புதிய படைப்பைக் குறிக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு இது எல்லா நாட்களிலும் முதல் நாளாகவும், எல்லா பண்டிகைகளிலும் முதல் நாளாகவும், கர்த்தருடைய நாளாகவும் மாறிவிட்டது ஞாயிற்றுக்கிழமை: நாம் அனைவரும் சூரியனின் நாளில் கூடுகிறோம், ஏனென்றால் அது கடவுள், இருளிலிருந்து ஒளியைப் பிரித்து, உலகைப் படைத்த முதல் நாள்; இந்த நாளில்தான் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். ஞாயிறு ஓய்வுநாளின் நிறைவேற்றம். (Code of Canon Law 2174) ஞாயிறு என்பது ஒவ்வொரு வாரமும் காலவரிசைப்படி பின்பற்றப்படும் ஓய்வுநாளிலிருந்து தெளிவாக வேறுபடுகிறது; கிறிஸ்தவர்களுக்கு அதன் சடங்கு அனுசரிப்பு ஓய்வு நாளை மாற்றுகிறது. கிறிஸ்துவின் பாஸ்காவில், ஞாயிற்றுக்கிழமை யூத ஓய்வுநாளின் ஆன்மீக உண்மையை நிறைவேற்றுகிறது மற்றும் கடவுளில் மனிதனின் நித்திய வாழ்வை அறிவிக்கிறது. ஏனெனில் கிறிஸ்துவின் மறை உண்மைக்காக தயாரிக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தின் கீழ் வழிபாடு, கிறிஸ்துவின் சில அம்சங்களை முன்னறிவித்தது: பழைய விஷயங்களின்படி வாழ்ந்தவர்கள் ஒரு புதிய நம்பிக்கைக்கு வந்துள்ளனர், இனி ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை, ஆனால் கர்த்தருடைய நாளைக் கடைப்பிடிக்கிறார்கள், அதில் நம் வாழ்க்கை அவராலும் அவருடைய மரணத்தாலும், உயிர்ப்பினாலும் ஆசீர்வதிக்கப்படுகிறது. (Code of Canon Law 2175).
11. எனவே, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றைய கடன் திருநாட்களிலும் கட்டாயம் முழு பூஜையில் பங்கு கொள்ள வேண்டும். பங்கு கொள்ளாவிட்டால் அது அவர்களுக்கு பாவம்.
Comments
Post a Comment